4 22 scaled
உலகம்செய்திகள்

வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு

Share

வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு

தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் பொறியாளர் ஒருவர், கல்விக்கடன் தொடர்பாக வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் மேலத்தெரு மெயின்ரோடு ஆமத்தன் பொத்தை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் உதயகுமார் (64) மற்றும் ஜெயஸ்ரீ (56). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மகள் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மகன் கணேஷ்ராஜா (28) எம்.இ படித்து முடித்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர், இரணியல் கிளையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கல்விக்கடனாக 2.5 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். இந்த கடனை கட்டி முடிக்காததால் இலவச சட்ட மையத்தில் இருந்து கணேஷ் ராஜா இன்று (செப்.08) ஆஜராகுமாறு அழைப்பாணை வந்துள்ளது.

இதன் பிறகு, இந்த தகவலை கணேஷ் ராஜாவின் தாயார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது தனது தாயிடம், நான் உயிருடன் இருக்க மாட்டேன் எனக் கூறி கணேஷ் ராஜா கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில், கணேஷ் ராஜா சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கல்விக்கடன் தள்ளுபடி ஆகும் என்று நினைத்தேன் என விரக்தியில் பெற்றோரிடம் மன வேதனையுடன் கூறியுள்ளார்.

அப்போது, அவர்கள் கடனை கட்டி விடலாம் என்றும், இலவச சட்ட மையத்திற்கு ஆஜராகி விட்டு வரும்படியும் கூறியுள்ளனர்.

பின்னர், மாடி அறைக்கு சென்ற கணேஷ் ராஜா கதவை பூட்டியுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது தூக்கிட்டு மயங்கிய நிலையில் கணேஷ் ராஜா கிடந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கணேஷ் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து உதயகுமார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...