பெண்களை தேடி தேடி வேட்டையாடிய கொரியாவின் ரைன்கோட் சீரியல் கில்லர்
உலகம்செய்திகள்

பெண்களை தேடி தேடி வேட்டையாடிய கொரியாவின் ரைன்கோட் சீரியல் கில்லர்

Share

பெண்களை தேடி தேடி வேட்டையாடிய கொரியாவின் ரைன்கோட் சீரியல் கில்லர்

south-korea-s-the-raincoat-serial-killer-killed
தென் கொரியாவில் சீரியல் கில்லர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்விக்கு பிறகு பாலியல் தொழிலாளர்களை சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுள்ளார்.

தென் கொரியாவின் யூ யங்-சுல்(Yoo Young-chul) என்ற நபர், செல்வந்தர்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர் என கிட்டத்தட்ட 26 பேரை அடித்துக் கொண்டுள்ளார்.

பெண் பாலியல் தொழிலாளிகளை கொல்வதற்கு முன்னதாக பணக்கார தம்பதிகளை ரைன்கோட் கில்லர் என்று அழைக்கப்பட்ட யூ யங்-சுல் என்ற நபர் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுள்ளார்.

அவரது காதலி அவரை ஏமாற்றிய பிறகே யூ யங்-சுல் மசாஜ் பார்லர்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளிகளை குறித்து வைத்து சுத்தியால் அடித்து கொலை செய்ய தொடங்கியுள்ளார்.

1988 முதல் 1998 வரையிலான காலகட்டங்களில் யூ யங்-சுல் மிக நீண்ட குற்ற வரலாற்றை கொண்டு இருந்தார். ஆனால் 2000 ஆண்டில் தான் முதல் முறையாக 15 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக யூ யங்-சுல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது பணக்காரர்களை குறித்து கொலை செய்த கொரிய சீரியல் கொலைகாரர் ஜியோங் டு-யோங் மீது பற்றுக் கொண்டுள்ளார். மேலும் அவரை பின் தொடர்ந்து பணக்காரர்களை குறி வைத்து சுத்தியால் அடித்து கொலை செய்ய தொடங்கியுள்ளார்.

இவரது குற்ற பின்னணி அறிந்த பிறகு முன்னாள் மனைவி, மசாஜ் நிலைய தொழிலாளி மற்றும் அவரது காதலி அவரை விட்டுச் செல்லவே அவருக்கு பெண்கள் மீதான வெறுப்பு ஏற்பட்டு மசாஜ் நிலைய பெண்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளிகளை கொலை செய்ய தொடங்கியுள்ளார்.

இவ்வாறு தொடர் கொலைகளை யோ செய்ய தொடங்கிய நிலையில், இறுதியாக பாதிக்கப்பட்டு இருந்த மசாஜ் நிலைய பெண் ஒருவரை அவர் தொலைபேசி மூலம் வெளியே அழைத்து இருந்தார்.

இதனை வைத்து மசாஜ் நிலைய உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் யூ யங்-சுல்-ஐ கைது செய்தார்.

2004ல் யூ யங்-சுல்-லின் சீரியல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், யூ யங்-சுல் மூன்று நீதிபதிகளை தாக்க முயற்சித்தார்.

மேலும் சிறையில் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார். இதையடுத்து அவருக்கு வழக்கறிஞர்கள் மரணத் தண்டனை விதிக்குமாறு கேட்டுக் கொண்டனர், இதற்கு யூ யங்-சுல் நன்றியும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர், இது சரியான முடிவு இல்லை, என்னை போன்றவர்கள் உயிருடன் இருப்பது நல்லது அல்ல என்று யூ யங்-சுல் எதிர்ப்பு தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...