6 8
உலகம்செய்திகள்

புடின் வாழ்த்து கூறாத நிலையில்..டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு குறித்து பேசிய ரஷ்ய அதிகாரிகள்

Share

புடின் வாழ்த்து கூறாத நிலையில்..டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு குறித்து பேசிய ரஷ்ய அதிகாரிகள்

மெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகள் ஓரளவு மீட்டெடுக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்னும் வாழ்த்து கூறவில்லை.

ஆனாலும், கிரெம்ளினில் உள்ள உயர் அதிகாரிகள், ரஷ்ய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகம் தனிப்பட்ட முறையில் சில விடயங்களில் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக உக்ரைன் போர் தொடர்பில் அவர்கள் கூறும்போது, “பதவியேற்பு விழா நடக்கும் வரை நாங்கள் உக்ரைனில் முன்னேறுவோம். ஜனவரிக்குள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் நிர்வாக எல்லைகளை அடைவது நல்லது. பின்னர் கெர்சனுடன் என்ன செய்வது என்று முடிவு செய்வோம்.

ரஷ்ய படைகள் உக்ரைனில் தொடர்ந்து முன்னேறினால், புதிய அமெரிக்க நிர்வாகம் சண்டையை நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்மொழிவது தர்க்கரீதியானதாகவும், எளிதாகவும் இருக்கும். கீவ் பேச்சுக்களை நடத்த அதிக தயார்நிலையைக் காண்பிக்கும்” என தெரிவித்தனர்.

மேலும், டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு திரும்புவது ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போர், பலவீனமான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகள் ஓரளவு மீட்டெடுக்கப்படும் என நம்புவதாக 7 மூத்த அதிகாரிகள் மற்றும் ரஷ்ய வணிக உயரடுக்கின் 3 உறுப்பினர்கள் Vpostயிடம் தெரிவித்தனர்.

அதேபோல் ரஷ்ய அதிகாரி ஒருவர், “டிரம்ப் பதவியேற்று தனது குழுவை அமைத்தவுடன், நாங்கள் ஆலோசனைகளைத் தொடங்க ஒப்புக் கொள்ளலாம். அவர் பேச்சுவார்த்தை நடத்த வசதியாக இருக்கும். இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோவிற்கு யாரும் வரவில்லை” என்றார்.

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதில் டிரம்ப் விரக்தியுடன் இருப்பார் என்று ரஷ்ய ராஜதந்திரிகள் கணித்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அதிகாரம் இல்லாததால், பெயர் தெரியாத நிலையில் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...