6 8
உலகம்செய்திகள்

புடின் வாழ்த்து கூறாத நிலையில்..டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு குறித்து பேசிய ரஷ்ய அதிகாரிகள்

Share

புடின் வாழ்த்து கூறாத நிலையில்..டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு குறித்து பேசிய ரஷ்ய அதிகாரிகள்

மெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகள் ஓரளவு மீட்டெடுக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்னும் வாழ்த்து கூறவில்லை.

ஆனாலும், கிரெம்ளினில் உள்ள உயர் அதிகாரிகள், ரஷ்ய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகம் தனிப்பட்ட முறையில் சில விடயங்களில் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக உக்ரைன் போர் தொடர்பில் அவர்கள் கூறும்போது, “பதவியேற்பு விழா நடக்கும் வரை நாங்கள் உக்ரைனில் முன்னேறுவோம். ஜனவரிக்குள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் நிர்வாக எல்லைகளை அடைவது நல்லது. பின்னர் கெர்சனுடன் என்ன செய்வது என்று முடிவு செய்வோம்.

ரஷ்ய படைகள் உக்ரைனில் தொடர்ந்து முன்னேறினால், புதிய அமெரிக்க நிர்வாகம் சண்டையை நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்மொழிவது தர்க்கரீதியானதாகவும், எளிதாகவும் இருக்கும். கீவ் பேச்சுக்களை நடத்த அதிக தயார்நிலையைக் காண்பிக்கும்” என தெரிவித்தனர்.

மேலும், டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு திரும்புவது ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போர், பலவீனமான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுடனான உறவுகள் ஓரளவு மீட்டெடுக்கப்படும் என நம்புவதாக 7 மூத்த அதிகாரிகள் மற்றும் ரஷ்ய வணிக உயரடுக்கின் 3 உறுப்பினர்கள் Vpostயிடம் தெரிவித்தனர்.

அதேபோல் ரஷ்ய அதிகாரி ஒருவர், “டிரம்ப் பதவியேற்று தனது குழுவை அமைத்தவுடன், நாங்கள் ஆலோசனைகளைத் தொடங்க ஒப்புக் கொள்ளலாம். அவர் பேச்சுவார்த்தை நடத்த வசதியாக இருக்கும். இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோவிற்கு யாரும் வரவில்லை” என்றார்.

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதில் டிரம்ப் விரக்தியுடன் இருப்பார் என்று ரஷ்ய ராஜதந்திரிகள் கணித்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அதிகாரம் இல்லாததால், பெயர் தெரியாத நிலையில் கூறப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...