23 64ee8985180f6
உலகம்செய்திகள்

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

Share

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

தற்போதைய சூழலில் சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது என பிரேசிலின் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு ரஷ்யா தகவல் அளித்துள்ளது.

வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர்கள் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட எம்ப்ரேயர் விமானம் கடந்த வாரம் மாஸ்கோவின் வடக்கே விபத்துக்குள்ளானதில் இறந்தனர்.

ரஷ்ய ராணுவ நிர்வாகத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 2 மாதங்களுக்கு பிறகு எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியாகியுள்ளார். 1999ல் ரஷ்யாவின் ஆட்சி பொறுப்புக்கு வந்த விளாடிமிர் புடினுக்கு இந்த ஆயுத கிளர்ச்சியானது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விசாரணைக்கு உதவ ரஷ்யா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டால், உதவ தயார் என பிரேசிலின் CENIPA அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காத ரஷ்யா, தற்போது விசாரணை முன்னெடுக்காது என அறிவித்துள்ளது.

ஆனால் பிரிகோஜின் இறப்பில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், ரஷ்யா வெளிப்படையாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சில முன்னாள் புலனாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய எம்ப்ரேயர் விமானமானது பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்புடைய விமான விபத்தில் எந்த வகையிலும் ரஷ்யா ஈடுபடவில்லை என்றே புடின் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்புடைய விமானமானது மாஸ்கோவில் இருந்து உள்ளூர் நகரமொன்றில் புறப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கியுள்ளதால், அது சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட தேவையிருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...