புதிய புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் வீடுகளைக் கட்டுவது சாத்தியமேயில்லை: புதிய அறிவிப்பு
உலகம்செய்திகள்

தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை தடுத்தால்… கனடாவின் நிலைமை மோசமாகும்

Share

தற்காலிக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு வருபவர்களைத் தடுத்தால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என நிதி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் வருகையால் கனடாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளது. ஆகவே, அத்தகைய நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டு வருகிறது.

ஆனால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை (non-permanent resident) பெடரல் அரசு கட்டுப்படுத்தினால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என Desjardins என்னும் கனேடிய நிதி அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

நேற்று, அதாவது, புதன்கிழமை அந்த அமைப்பின் மூத்த இயக்குநரான Randall Bartlett வெளியிட்ட அந்த அறிக்கை, பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருப்பதால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை இயல்பாகவே குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. தற்போதைய கணிப்புகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2024 இல், 0.1 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியிருக்கும் நிலையில், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை முற்றிலுமாக நிறுத்தும் வகையில் புதிய கொள்கைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தினால், 2024 இல், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 0.7 சதவிகிதமாக சுருங்கக்கூடும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், அத்தகைய நடவடிக்கை, நாடு மந்த நிலையிலிருந்து மீண்டெழுவதையும் பாதிக்கும் என்றும், அதன் பின்னரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதற்கு அது வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆக, கனடா இப்போதை விட, நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை இரட்டிப்பாக்கினால், இந்த ஆண்டில், கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவிகிதம் வளர்ச்சியடையும் என்றும், வரவிருக்கும் ஆண்டுகளில் மிகவும் வலுவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்றும் Randall Bartlett கூறுகிறார்.

அதே நேரத்தில், தொடர்ந்து நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை அதிகரித்துக்கொண்டே இருந்தால், அதனால் சில பாதிப்புகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை என்கிறது அந்த அறிக்கை. அதாவது, நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதிகளை அதிகப்படுத்திக்கொண்டே சென்றால், அது மக்களுக்கு தங்க வீடு கிடைக்கும் நிலைமையை பாதிக்கலாம் என்றும், அதனால் பணவீக்கம் மோசமாகலாம் என்றும், அதனால், கனடா வங்கி தனது வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்த்தியே வைத்திருக்கும் கட்டாயம் ஏற்படாம் என்றும் கூறுகிறது Randall Bartlett வெளியிட்டுள்ள அறிக்கை.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...