Christchurch Mosque New Zealand
உலகம்செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதல்: குற்றவாளியின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை ஆரம்பம்!

Share

கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 51 பேரைக் கொடூரமாகக் கொலை செய்த தாக்குதல்தாரியின் மேன்முறையீட்டு மனு மீதான ஒரு வார கால விசாரணை நாளை (09) வெல்லிங்டன் நீதிமன்றத்தில் ஆரம்பமாகிறது.

இந்த மேன்முறையீட்டு விசாரணையில் நீதிமன்றம் பிரதானமாக இரண்டு விடயங்களை ஆராயவுள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, தான் முன்னதாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற அனுமதி கோரியுள்ளார்.

சிறைச்சாலையில் தான் “சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற” சூழலை எதிர்கொண்டதாகவும், அதனால் தர்க்கரீதியான முடிவுகளை எடுக்கும் திறனை இழந்த நிலையில் வாக்குமூலம் அளித்ததாகவும் அவர் வாதாடுகிறார்.

2020 ஆம் ஆண்டில், நியூசிலாந்து சட்ட வரலாற்றிலேயே முதல் முறையாக இவருக்குப் பிணையில் வரமுடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டு 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்திருக்க வேண்டிய நிலையில், 5 ஆண்டுகள் தாமதமாக இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பது சட்டரீதியாகப் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இந்த மேன்முறையீடு தங்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சியையும் வலியையும் அளிப்பதாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிறைஸ்ட்சர்ச் தாக்குதல் நடந்து சுமார் ஒரு மாத இடைவெளியில், 2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கிறைஸ்ட்சர்ச் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இலங்கையில் இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அப்போதைய இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, நீதிமன்றம் இந்த விசாரணையைத் தீவிரவாதக் கருத்துக்களையோ அல்லது வெறுப்புப் பேச்சுகளையோ பரப்புவதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்த எவ்வித இடமும் அளிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...