3 17 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

Share

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

கனேடிய மாகாணமொன்றில் இரண்டு பேரை வாளால் தாக்கிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், பொலிசார் அவரை வலைவீசித் தேடிவருகிறார்கள்.

கனடாவின் Prince Edward Island மாகாணத்தில், கடற்கரைக்குச் சென்றிருந்த ஒரு பெண்ணும், இளைஞர் ஒருவரும் மர்ம நபர் ஒருவரால் வாளால் தாக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் பலத்த காயமடைந்துள்ளார் என்றாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களுடன் இருந்த மூன்றாவது நபர் தாக்குதலிலிருந்து தப்பிவிட்டார்.

அந்தப் பெண்ணையும் இளைஞரையும் தாக்கிய நபர் இன்னமும் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ள பொலிசார், அந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அவரால் இப்போதைக்கு பொதுமக்களுக்கு அபாயம் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், என்றாலும், மக்கள் கதவுகளை மூடிக்கொண்டு பத்திரமாக வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...