HK5OOCOO5VF7LD6ZPEDZS5GCQI
உலகம்செய்திகள்

எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு எரிமலை வெடிப்பு: மத்திய கிழக்கு விமான சேவை பாதிப்பு!

Share

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை, சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) வெடித்தது. இந்தச் சம்பவம் காரணமாக, வானில் சுமார் 14 கிலோமீட்டர் உயரத்துக்குச் சாம்பலும், புகை மண்டலமும் சூழ்ந்துள்ளது.

அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபார் (Afar) பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை தொடர்ந்து பல மணி நேரம் வெடித்துச் சிதறியது.

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து உருவான சாம்பல் சூழ் மேகங்கள் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த விவரங்களை எத்தியோப்பிய அரசு அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யாமல் உள்ளனர்.

எரிமலை சாம்பல் ஆலோசனை மையம், எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு குறித்தும், அதனால் மேகங்களில் சாம்பல், புகை சூழ்ந்ததையும் உறுதி செய்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கு பாதையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியை விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் டி.ஜி.சி.ஏ. (DGCA) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையமும் தெரிவித்துள்ளன. நிலைமை சீராகும் வரை விமான நிலையங்கள் கவனமுடன் விமானப் போக்குவரத்தைக் கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...