24 664e8d8c1df5a
உலகம்செய்திகள்

இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்ற குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்: இது இரண்டாவது சம்பவம்

Share

இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்ற குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்: இது இரண்டாவது சம்பவம்

அவுஸ்திரேலியாவில் குழந்தை ஒன்று பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இது அந்த நாட்டில் முதல் மனிதப் பாதிப்பு என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய குழந்தை முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து திரும்பிய நிலையில், முன்னெடுக்கப்பட்ட சோதனையிலேயே, பறவைக் காய்ச்சல் தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து காணப்படுகிறது. பில்லியன் கணக்கான பண்ணை மற்றும் காட்டு பறவைகள் கொல்லப்பட காரணமாக அமைந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான பாலூட்டி இனங்களுக்கும் பரவுகிறது.

இதனிடையே அவுஸ்திரேலிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின்னர், மேலும் பாதிப்புகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என கூறியுள்ளனர்.

பறவைக் காச்சலானது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிக எளிதாக பரவாது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இதுவே முதல் பாதிப்பு என்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய குழந்தை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது என்றும், ஆனால் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டெக்சாஸ் மாகாணத்தில் கால்நடை மந்தைகளில் பறவைக் காச்சல் பாதிப்பு பெருகிவரும் நிலையில், பண்ணை ஊழியர் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...