23 64f499d26d791
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் மக்கள்

Share

அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் மக்கள்

தாலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற 8 லட்சம் ஆப்கானியர்கள் காத்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு தாலிபான்கள் கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது.

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அவர்கள் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அடுக்கடுக்காக விதித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கான கல்வி உரிமை மறுப்பு, வேலை வாய்ப்பு மறுப்பு மற்றும் ஆடை கட்டுப்பாடு போன்றவற்றை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

தாலிபான்கள் உடனான போர் தொடங்கிய பிறகு அமெரிக்க படைகளுக்கு உதவிய நபர்களுக்கு அமெரிக்காவில் குடியேற 2009ம் ஆண்டு சிறப்பு விசா வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

துபாய் செல்லும் 100 மாணவிகளை தடுத்து நிறுத்திய தாலிபான்கள்
தாலிபான் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் அமெரிக்காவில் குடியேற தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைப்படி, சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் ஆப்கானியர்கள் அமெரிக்காவில் குடியேற விண்ணப்பித்து சிறப்பு விசாவை பெற காத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...