23 64f499d26d791
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் மக்கள்

Share

அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் மக்கள்

தாலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற 8 லட்சம் ஆப்கானியர்கள் காத்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு தாலிபான்கள் கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது.

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அவர்கள் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அடுக்கடுக்காக விதித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கான கல்வி உரிமை மறுப்பு, வேலை வாய்ப்பு மறுப்பு மற்றும் ஆடை கட்டுப்பாடு போன்றவற்றை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

தாலிபான்கள் உடனான போர் தொடங்கிய பிறகு அமெரிக்க படைகளுக்கு உதவிய நபர்களுக்கு அமெரிக்காவில் குடியேற 2009ம் ஆண்டு சிறப்பு விசா வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

துபாய் செல்லும் 100 மாணவிகளை தடுத்து நிறுத்திய தாலிபான்கள்
தாலிபான் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் அமெரிக்காவில் குடியேற தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைப்படி, சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் ஆப்கானியர்கள் அமெரிக்காவில் குடியேற விண்ணப்பித்து சிறப்பு விசாவை பெற காத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...