25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

Share

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் இருப்பதாக ஜனாதிபதி அநுர தலைமையிலான தரப்பினர் நீண்டகாலமாகக் கூறி வந்தனர். அந்த டொலர்களை மீட்பதற்கு இதுவே பொருத்தமான காலம் என அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நிதியை மீட்பதற்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தாம் தயார் எனவும், தேவையெனில் இதற்காகச் சத்தியக் கடதாசிகளை (Affidavits) வழங்கவும் தான் முன்வருவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இருப்பினும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் பலமான எதிர்க்கட்சியாகச் செயற்படவும் இத்தகைய இணைவுகள் அவசியமானவை என்றார்.

நாட்டின் நன்மைக்காக எதிர்க்கட்சியாகத் தாம் இணைந்து செயற்பட வேண்டிய இடங்களில் உரிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...