25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

Share

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் இருப்பதாக ஜனாதிபதி அநுர தலைமையிலான தரப்பினர் நீண்டகாலமாகக் கூறி வந்தனர். அந்த டொலர்களை மீட்பதற்கு இதுவே பொருத்தமான காலம் என அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நிதியை மீட்பதற்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தாம் தயார் எனவும், தேவையெனில் இதற்காகச் சத்தியக் கடதாசிகளை (Affidavits) வழங்கவும் தான் முன்வருவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இருப்பினும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் பலமான எதிர்க்கட்சியாகச் செயற்படவும் இத்தகைய இணைவுகள் அவசியமானவை என்றார்.

நாட்டின் நன்மைக்காக எதிர்க்கட்சியாகத் தாம் இணைந்து செயற்பட வேண்டிய இடங்களில் உரிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...