Ravi
செய்திகள்இலங்கை

லசந்த கொலையில் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? – நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்க கேள்வி; சபை முதல்வர் பதில்!

Share

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (08) 17 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த வழக்கில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்துப் பதிலளிக்க முடியாது என அரசாங்கம் கூறுவது ஏற்புடையதல்ல.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து மற்றும் மருந்து விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும்போது, அவை குறித்து நாடாளுமன்றில் பதிலளிக்கப்படுகிறது. ஆனால் லசந்த விவகாரத்தில் மட்டும் ஏன் இந்தத் தயக்கம்?

17 வருடங்கள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என அவர் சாடினார்.

ரவி கருணாநாயக்கவின் கேள்விக்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஊடகவியலாளர் கொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்கள் கடந்த காலங்களில் ஆட்சியாளர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அதனால்தான் விசாரணைகள் முடக்கப்பட்டன. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயமாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

இன்று காலை பொரளை கனத்தை மயானத்தில் லசந்த விக்ரமதுங்கவின் 17-வது ஆண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தியதுடன், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

 

 

Share
தொடர்புடையது
MediaFile 6 3
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 15 வயதுச்...

image 870x 6965aedee783e
செய்திகள்இலங்கை

பல மாகாணங்களில் மழை: சில இடங்களில் 50 மி.மீ பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்...

MediaFile 7 4
செய்திகள்உலகம்

உலகப் பொருளாதாரத்தில் புதிய வரலாறு: 5,000 டொலர்களைக் கடந்தது தங்கம்! வெள்ளி மற்றும் பெலேடியமும் அதிரடி உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் என்ற பிரம்மாண்டமான...

MediaFile 5 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைத்த ஃபெர்ன் பனிப்புயல்: 12 பேர் உயிரிழப்பு; 13,000 விமானங்கள் ரத்து; அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான குளிர்காலப் புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் “ஃபெர்ன்” (Winter Storm Fern)...