8 13 scaled
இந்தியாசெய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு?

Share

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு?

இந்தியாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அண்ணன் சத்ய நாராயணராவ் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஜெயிலர் படம் வெற்றியடைந்ததையடுத்து, ரஜினிகாந்தின் குடும்பத்தினர் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இதனால், ஜெயிலர் படம் வெளியான திரையரங்குகளுக்கு ரஜினிகாந்த் சகோதரரான சத்ய நாராயணராவ் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், நேற்று மாலை திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று ஜெயிலர் படம் பார்த்துவிட்டு ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”சூப்பர் ஸ்டார் பட்டத்தை மக்கள் ரஜினிகாந்திற்கு மட்டும் கொடுத்துள்ளனர். அது பல ஆண்டுகளாகவே அவரிடம் இருக்கிறது.

அவர், இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் கிடையாது. மேலும், அவர் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடிப்பார். ஏனென்றால், திரையுலகத்தை நம்பி பல தொழிலாளர்கள் இருப்பதால் தொடர்ந்து நடிப்பார்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர்,”நடிகர் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரமாட்டார் என்றும், அரசியலுக்கு வர மாட்டார் என்றும்” கூறினார்.

அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் தங்களுடைய வாக்குகளை அளித்துக்  கொள்ளலாம் என்றும் கூறினார்.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...