8 13 scaled
இந்தியாசெய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு?

Share

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு?

இந்தியாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அண்ணன் சத்ய நாராயணராவ் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஜெயிலர் படம் வெற்றியடைந்ததையடுத்து, ரஜினிகாந்தின் குடும்பத்தினர் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இதனால், ஜெயிலர் படம் வெளியான திரையரங்குகளுக்கு ரஜினிகாந்த் சகோதரரான சத்ய நாராயணராவ் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், நேற்று மாலை திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று ஜெயிலர் படம் பார்த்துவிட்டு ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”சூப்பர் ஸ்டார் பட்டத்தை மக்கள் ரஜினிகாந்திற்கு மட்டும் கொடுத்துள்ளனர். அது பல ஆண்டுகளாகவே அவரிடம் இருக்கிறது.

அவர், இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் கிடையாது. மேலும், அவர் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடிப்பார். ஏனென்றால், திரையுலகத்தை நம்பி பல தொழிலாளர்கள் இருப்பதால் தொடர்ந்து நடிப்பார்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர்,”நடிகர் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரமாட்டார் என்றும், அரசியலுக்கு வர மாட்டார் என்றும்” கூறினார்.

அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் தங்களுடைய வாக்குகளை அளித்துக்  கொள்ளலாம் என்றும் கூறினார்.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...