8 13 scaled
இந்தியாசெய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு?

Share

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு?

இந்தியாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அண்ணன் சத்ய நாராயணராவ் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஜெயிலர் படம் வெற்றியடைந்ததையடுத்து, ரஜினிகாந்தின் குடும்பத்தினர் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இதனால், ஜெயிலர் படம் வெளியான திரையரங்குகளுக்கு ரஜினிகாந்த் சகோதரரான சத்ய நாராயணராவ் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், நேற்று மாலை திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று ஜெயிலர் படம் பார்த்துவிட்டு ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”சூப்பர் ஸ்டார் பட்டத்தை மக்கள் ரஜினிகாந்திற்கு மட்டும் கொடுத்துள்ளனர். அது பல ஆண்டுகளாகவே அவரிடம் இருக்கிறது.

அவர், இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் கிடையாது. மேலும், அவர் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடிப்பார். ஏனென்றால், திரையுலகத்தை நம்பி பல தொழிலாளர்கள் இருப்பதால் தொடர்ந்து நடிப்பார்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர்,”நடிகர் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரமாட்டார் என்றும், அரசியலுக்கு வர மாட்டார் என்றும்” கூறினார்.

அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் தங்களுடைய வாக்குகளை அளித்துக்  கொள்ளலாம் என்றும் கூறினார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...