depositphotos 94240270 stock photo ripening rice in a paddy
செய்திகள்இலங்கை

120 ரூபாவுக்கு குறைவாக நாம் நெல்லை விற்கமாட்டோம் – விவசாயிகள்!!

Share

ஒரு கிலோகிராம் நெல்லை 120 ரூபாய்க்கு குறைவாக வழங்குவதற்கு தாம் தயாராக இல்லை என, விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இரண்டு சிறுநீரகங்களையும் காப்பாற்ற இயற்கை உரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்திய அரசாங்கம், தற்போது வெளிநாடுகளிலில் இருந்து காபனிக் உரத்தை பயன்படுத்தி விளைந்த அரிசியையா? இறக்குமதி செய்கிறது.

இவ்வாறு பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜகத் அருண கீர்த்தி விசனம் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

காபனிக் உர பயன்பாடு காரணமாக இன்று விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விளைச்சல்கள் 40 – 50 சதவீதமாக குறைவடைந்துள்ளன. ஏனைய மாவட்டங்களில் நெல்விளைச்சல் 60 சதவீதமாக குறைந்துள்ளது.

இதற்கு மாற்றீடாக விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 40 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த கூறுகிறார்.

ஆனால், அமைச்சரின் கருத்து தொடர்பில் மீண்டும் மீண்டும் கவனம் செலுத்துமாறு நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜகத் அருண கீர்த்தி தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...