26 6969755eb0ba8
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ். மக்கள் வைத்த நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதி!

Share

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது யாழ்ப்பாண மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாத்து, இனவாதமற்ற மற்றும் தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்ததாவது “கடந்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தை முதன்முறையாக வெற்றி கொள்ள எம்மீது நம்பிக்கை வைத்துப் பங்களித்தவர்கள் நீங்கள். அந்த நம்பிக்கையைச் சிறிதளவேனும் வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டேன்.”

இனவாதத்திற்கு இடமில்லாத, அனைவரும் சமத்துவமாக வாழக்கூடிய தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதே எமது இலக்காகும்.

பொருளாதார ரீதியாக அழுத்தங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு, இப்போது இருப்பதை விடச் சிறந்த வாழ்க்கை நிலையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, அனைவரும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழும் நாட்டை நாம் நிச்சயம் உருவாக்குவோம்.

“இந்தத் தைப்பொங்கல் தினத்தில் நாம் ஒரு பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் பிரியாது ஒன்றுபடுவோம். எமது மக்களுக்காகச் சிறந்த நாட்டை உருவாக்க அனைவரும் திடஉறுதியுடன் முன்வர வேண்டும்” என ஜனாதிபதி தனது உரையில் அறைகூவல் விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு தென்இலங்கை அரசியல் கட்சி வரலாற்றில் முதன்முறையாகப் பாரிய ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த விஜயமும் உரையும் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...