images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

Share

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சிற்குட்பட்ட தேசிய மகளிர் குழுவினால் (NCW) செயல்படுத்தப்படும் 1,938 பெண்களுக்கான இலவச உதவி அழைப்பின்மூலம் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான 2,182 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றில், அதிகளவிலான முறைப்பாடுகள் வீட்டு வன்முறை தொடர்பில் பதிவாகியிருந்தன, அவை 1,488 முறைப்பாடுகள் ஆகும். அத்துடன், 234 இணையவழி குற்றச்செயல் தொடர்பான முறைப்பாடுகளும், 7 பாலியல் வன்கொடுமை (Rape) தொடர்பான முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும், தேசிய மகளிர் குழுவும், அரசு மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் ஒத்துழைப்புடன், 24 மணி நேரமும் மூன்று மொழிகளிலும் செயற்படும் 1,938 பெண்களுக்கான இலவச உதவி அழைப்பினை வலுப்படுத்தவும், அதனை மக்கள்மத்தியில் கொண்டுசேர்ப்பதற்குமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவற்றின் நோக்கம் விழிப்புணர்வை அதிகரித்து முறைப்பாடுகளை மேற்கொள்வதனை ஊக்குவிப்பதன் மூலம் பாலியல் மற்றும் பால்நிலையினை அடிப்படையாகக்கொண்ட வன்முறையினை (SGBV) ஒழிப்பதற்காக பணியாற்றுவதாகும்.

மேலும், பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்வாதமானது நவம்பர் 25 ஆம் திகதி பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த 16 நாட்கள், டிசம்பர் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினத்துடன் நிறைவடைகின்றன, பெண்கள்மத்தியில் விழிப்புணர்வினை அதிகரிப்பதற்கும், அவர்கள் தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும்வகையில் அவர்களை வலுப்படுத்துவதற்குமான பல்வேறு செயற்பாடுகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இந்நாட்களில் நடாத்தப்படும்.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...