sanjay
இந்தியாசெய்திகள்

விஜய் மகன் ஆசைக்கு  நோ சொன்ன லைக்கா

Share

விஜய் மகன் ஆசைக்கு  நோ சொன்ன லைக்கா

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது.

ஆனால் இப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார், மற்ற நடிகர் நடிகைகளின் விவரம் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இந்நிலையில், இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தன்னுடைய முதல் படம் என்பதால் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீனை இசையமைக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளார் சஞ்சய். ஆனால், இதற்கு லைக்கா நிறுவனம் நோ என கூறிவிட்டதாம்.

அவருக்கு பதிலாக அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தால், படத்திற்கு நல்ல பிரபலம் கிடைக்கும், படத்தின் பிஸினஸ்க்கும் உதவும் என எண்ணி சஞ்சய்யின் முதல் படத்திற்கு அனிருத்தை இசையமைக்க வைக்க லைக்கா முடிவு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால், இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....