8 23
இந்தியாசெய்திகள்

திருச்சியில் நடக்கும் விஜயின் அரசியல் மாநாடு.., 10 லட்சம் பேருக்கு உணவு சமைக்க இப்போதே ஓர்டர்

Share

திருச்சியில் நடக்கும் விஜயின் அரசியல் மாநாடு.., 10 லட்சம் பேருக்கு உணவு சமைக்க இப்போதே ஓர்டர்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.

இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார். அதற்குரிய வேலைகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடிகர் விஜய் நடத்தவுள்ளதாக தெரிகிறது.

அதோடு, மாநாட்டை முடித்து விட்டு 234 தொகுதிகளுக்கும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

இதில், தவெக மாநாட்டை பொறுத்தவரை முதலில் மதுரையில் நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது இந்த மாநாட்டை திருச்சியில் நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது திருச்சியில் உள்ள சிறுகனூர் என்ற பகுதியை மாநாட்டை நடத்த தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இருந்தும் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

இதனால், மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்கான ஓர்டரும் இப்போதே கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படம் வெளியான பிறகு மாநாடு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...