6 4
இந்தியாசெய்திகள்

விஜய் கைது செய்யப்படுவார் : தமிழக அரசின் அறிவிப்பால் பரபரப்பு

Share

கரூர் துயர சம்பவத்தை விசாரித்து வரும் ஆணையம் பரிந்துரைத்தால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? அரசுக்கு அச்சமா?” என்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் டி.கே.எஸ். இளங்கோவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்கும் ஆணையம், “விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பரிந்துரைத்தால், அவர் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என்று கூறினார்.

மேலும், சம்பவத்தின்போது விஜயும் அதே இடத்தில் இருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே அவர் மீது முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் விளக்கினார்.

விஜய் பரப்புரைக்காக மட்டுமே வந்தவர் என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்யப்படுவது முறை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...