5
இந்தியாசெய்திகள்

விஜய்க்கு ஒரு விதமான மனஅழுத்தம்; இது தீராத பழி! அந்தணன் அதிரடி பேச்சு

Share

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பிலான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் வலைப்பேச்சு அந்தணன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், இப்படி ஒரு சம்பவம் இந்திய வரலாற்றிலேயே நடந்தது இல்லை. இவ்வளவு பெரிய கூட்டம் இருந்தது இதுதான் முதல் முறை. எம்ஜிஆருக்கு அலை கடல் போல் கூட்டம் திரண்டது. அங்கு தள்ளுமுள்ளு ஏற்படாத வகை இருந்தது. ஆனால் இங்கு கட்டுப்பாடு அற்ற கூட்டமாக இருந்தது தான் இந்த துயர சம்பவம் நடப்பதற்கு காரணம்.

அந்தக் கூட்டத்தில் தடியடி நடந்ததாகவும், கத்தியை வைத்து கிழித்ததாகவும் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் சொல்கின்றார்கள். அப்படி என்றால் அந்த கூட்டத்தில் ஏதோ ஒரு கும்பல் நுழைந்துள்ளது என்று தான் அர்த்தம்.

ஆனாலும் இந்த சம்பவம் நடந்த பிறகு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் மௌனமாக ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பியுள்ளார் விஜய். இது மிகப்பெரிய வேதனையாக உள்ளது. அதன் பின்பு யாரும் அவரிடம் பேசவில்லை. அவர் ஒரு விதமான மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். யாருமே நெருங்க முடியாத அளவிற்கு பெரிய கோபத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு விஜய் செல்லக்கூடிய மனநிலை இல்லை என்றால், கட்சியில் இருக்கும் மற்றவர்கள் சென்று இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் விஜயின் வாழ்க்கையில் ஒரு தீராத பழியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...