12 30
இந்தியாசெய்திகள்

பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க போகும் விஜய்.., அனுமதி வழங்கிய பொலிஸார்

Share

பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க போகும் விஜய்.., அனுமதி வழங்கிய பொலிஸார்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக மாவட்டமான காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால், பசுமை விமான நிலையம் அமைக்கவுள்ள இடத்தைச் சேர்ந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு, பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில், பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி மற்றும் தமிழக டிஜிபி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில், பரந்தூர் போராட்டக் குழுவை சந்திக்க விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரந்தூர் செல்கிறார். அங்கு, விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்ட குழுவை சந்தித்து ஆதரவளிக்கவுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...