12 30
இந்தியாசெய்திகள்

பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க போகும் விஜய்.., அனுமதி வழங்கிய பொலிஸார்

Share

பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க போகும் விஜய்.., அனுமதி வழங்கிய பொலிஸார்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக மாவட்டமான காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால், பசுமை விமான நிலையம் அமைக்கவுள்ள இடத்தைச் சேர்ந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு, பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில், பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி மற்றும் தமிழக டிஜிபி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில், பரந்தூர் போராட்டக் குழுவை சந்திக்க விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரந்தூர் செல்கிறார். அங்கு, விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்ட குழுவை சந்தித்து ஆதரவளிக்கவுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...