10 2
இந்தியாசெய்திகள்

விஜய்யின் கைது விவகாரம்! தமிழ்நாட்டின் முக்கிய சட்டத்தரணி வெளிப்படை

Share

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவர்களது நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்களாயின் அது அரசியல் சார்ந்த விடயமான மாறவிடும் என தமிழ்நாடு சட்டத்தரணி எம் சத்தியகுமார் கூறியுள்ளார்.

பிரத்தியோக நிகழ்ச்சியொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது ஏற்பட்டுள்ள கைதுக்கு தமிழக அரசாங்கம் மற்றும் தமிழக வெற்றி கழகமும் பொறுப்பேற்க வேண்டும்.

கூட்டம் என்று வந்தாலே அது அரசாங்கத்தின் பொறுப்பு சார்ந்தது.

ஆகவே விஜய் மாத்திரம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று தமிழ்நாட்டு மாநிலமும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக வெற்றி கழகமும் கூட பொது போக்குவரத்து பாதையை தவிர்த்து தனிப்பட்ட இடங்களில் கூட்டத்தை நடத்தியிருக்கலாம்.

ஆனால் அவர்களும் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்தி கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

எனினும் குறித்த விபத்து சம்பவத்துக்கு தமிழக அரசாங்கத்துக்கும் நூறு சதவிகித பொறுப்பு உண்டு” என்றார்.

கரூரில் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய் நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

நாமக்கல் நிகழ்வை முடித்து கொண்டு இரவு 7 மணி அளவில் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் வருகைத்தந்திருந்தார்.

விஜயை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி பலர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...