images 9 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இரு தேரர்களின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஜனவரி 30-ல்!

Share

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

திருகோணமலையில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரத்தில், இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு இவ்விரு தேரர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை ரத்து செய்து, அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தேரர்கள் தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் அரசு தரப்பு சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்கள் விரிவாக ஆராயப்பட்டன.அனைத்து தரப்பு சமர்ப்பணங்களையும் கேட்டறிந்த நீதியரசர்கள் குழாம், இந்த மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அறிவிப்பதாக உத்தரவிட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் மதத் தலங்கள் அமைப்பது தொடர்பான சட்டச் சிக்கல்கள் மற்றும் இன நல்லிணக்கம் குறித்த விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
26 696cda61cd108
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி-க்களின் ஓய்வூதிய ரத்து: உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு; இரகசியத் தீர்ப்பு சபாநாயகருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...

electrician at work stockcake
செய்திகள்இலங்கை

இனி எலக்ட்ரீஷியன்களுக்கு உரிமம் கட்டாயம்! NVQ தகுதி இன்றி மின் வேலைகள் செய்யத் தடை!

இலங்கையில் மின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சார வல்லுநர்களுக்கான (Electricians) புதிய...

articles2Fr9PnSL7cktbisfxCs5bm
செய்திகள்உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகியது அமெரிக்கா! நிதி நெருக்கடியில் WHO!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக...

Mweb Maldives 630x375 1
செய்திகள்உலகம்

மாலைத்தீவு நாட்டினருக்கு நற்செய்தி: இலங்கைக்கு வர 90 நாள் விசா விலக்கு அளிப்பு!

வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு குடிமக்களுக்கு 90 நாள் வருகை விசா...