பௌத்தத்தை அழித்து ஈழம் அமைக்கிறதா அரசாங்கம்? – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஆவேசம்! மகாநாயக்க தேரர்களுக்கு முக்கிய கோரிக்கை!

25 691b53209a165

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலையை அகற்றியமை தொடர்பாக, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்கள் அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார். “வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த தர்மத்தை அழித்து ஈழத்தை நிறுவுவதன் மூலம் புலம்பெயர்ந்தோர் செய்ய விரும்புவதைச் செய்யும் ஒரு அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருக்கிறது.”

தர்ம இலட்சினையுடைய புத்தர் சிலையை காவல்துறையினர் அவ்வாறு எடுத்துச் சென்றது, தனக்கோ அல்லது ஒரு விகாரைக்கான பிரச்சினையோ அல்ல என்று தெரிவித்த அவர், இது முழு நாட்டின் பௌத்தத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.

“அப்போது தாங்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டதாகவும், இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படுவதாக அச்சமின்றி நாட்டிற்கு அறிவிப்பதாகவும்” அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டிக்கும் வகையில், அவர் மகாநாயக்க தேரர்களுக்கு ஒரு முக்கியக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அரசாங்கம் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி அளிக்கும் வரை, எந்த அரசாங்கத் தலைவர்களையும் விகாரைகளுக்கு அழைத்து வந்து ஆசி பெற வேண்டாம் என்று சங்க உத்தரவைப் பிறப்பிக்குமாறு மகாநாயக்க தேரர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், தாம் வீதிப் போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் தேரர் எச்சரித்துள்ளார்.

“இந்தப் பிரச்சினையை உடனடியாக நிறுத்தாவிட்டால், நாளை வீதிகளில் இறங்குவோம்” என்றும் தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version