new car sales
செய்திகள்இலங்கை

இறக்குமதி தடையை மீறி இலங்கைக்குள் வாகனங்களா?

Share

வாகன இறக்குமதிக்கான தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு இலங்கை சுங்கத்திணைக்களம் பதிலளித்துள்ளது.

அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு புதிய சொகுசு ரக கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாகனங்கள் எவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என பலதரப்பட்ட தரப்பினரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள சுங்க பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா, கடுவெல முதலீட்டுச் சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் பெறுமதி கூட்டப்பட்டதன் பின்னர் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்படி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பெப்ரவரி 11 அன்று, மேக் மரியா சவேரியா என்ற கப்பலில் குறித்த இரண்டு காடிலாக் எஸ்கலேட் வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கனடாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய தேவையான ஆவணங்களை நிறுவனம் வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...