new car sales
செய்திகள்இலங்கை

இறக்குமதி தடையை மீறி இலங்கைக்குள் வாகனங்களா?

Share

வாகன இறக்குமதிக்கான தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு இலங்கை சுங்கத்திணைக்களம் பதிலளித்துள்ளது.

அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு புதிய சொகுசு ரக கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாகனங்கள் எவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என பலதரப்பட்ட தரப்பினரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள சுங்க பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா, கடுவெல முதலீட்டுச் சபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் பெறுமதி கூட்டப்பட்டதன் பின்னர் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்படி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பெப்ரவரி 11 அன்று, மேக் மரியா சவேரியா என்ற கப்பலில் குறித்த இரண்டு காடிலாக் எஸ்கலேட் வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கனடாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய தேவையான ஆவணங்களை நிறுவனம் வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...