a955a649 f3c0 47fa 9047 dbddd6b15d10
செய்திகள்இலங்கை

வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரை கொடூரமாகத் தாக்கி கைது செய்த போலீசார்!!

Share

வலிதென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரான ஜிப்ரிக்கோ இளவாலை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் வலிகாமம் பிரதேசத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வலி தென்மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ஜோன் ஜிப்ரிக்கோ அவர்களுடைய வீட்டின் மீது ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருடைய ஆதரவாளர் என தெரிவிக்கப்படுபவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது .

இதில் குறித்த பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் காயமடைந்தார். இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பான வழக்கு போடப்பட்டது .

குறித்த சந்தேக நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் தன்னை குறித்த பிரதேச சபை உறுப்பினரும் அவரது குடும்பத்தினரும் தாக்கியதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

இதனையடுத்து நேற்றைய தினம் மாலை குறித்த பிரதேச சபை உறுப்பினர் வீட்டுக்குச் சென்ற போலீசார் குறித்த பிரதேச சபை உறுப்பினரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று தாக்கி உள்ளனர்.

இதில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் பலத்த தாக்குதலுக்கு உள்ளானது டன் உறுப்பினரின் சகோதரியும் தாக்குதலுக்குள்ளானார்.

இதனை அடுத்து குறித்த பிரதேச சபை உறுப்பினருடைய தங்கை மயக்கமடைந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் எந்த ஒரு முதலுதவி சிகிச்சைகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த பிரதேசசபை உறுப்பினரின் நண்பர்களால் 1990 அம்புலன்ஸ் சேவையின் மூலம் குறித்த இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது காயமடைந்த குறித்து ஏனைய குடும்பத்தினரையும் போலீசார் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர் .

இதன்பின் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் தாய் மாமா மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது மூவரையும் தலா 100000 ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...