21
இந்தியாசெய்திகள்

பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா? கரூர் சம்பவம் குறித்து வைரமுத்து வேதனை

Share

கரூர் துயர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்து கவிஞர் வைரமுத்து இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இது தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தனர்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை கவிதை வடிவில் எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது.

அந்த மரணங்களுக்கு முன்னும் பின்னுமான மனிதத் துயரங்கள் கற்பனையில் வந்து வந்து கலங்க வைக்கின்றன பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா?

இந்த வகையில் இதுவே கடைசித் துயரமாக இருக்கட்டும். ஒவ்வோர் உயிருக்கும் என் அஞ்சலி; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்.

இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வதே இந்த நீண்ட துயரத்துக்கு நிரந்த நிவாரணம் ஆடும் உடம்பு அடங்குவதற்கு நாளாகும்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...