rathakrusnan1
செய்திகள்இலங்கை

தரம் 6 புத்தகப் பிரச்சினைக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என இராதாகிருஷ்ணன் சாடல்!

Share

மலையகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில், கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (04) கொட்டகலை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உபகரணங்களை விநியோகித்தார்.

பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொட்டகலை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் ஏற்பட்டுள்ள பாரதூரமான தவறு குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

“தரம் 6 பாடப் புத்தக விவகாரமானது மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது. இதற்கான முழுப் பொறுப்பையும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.

மலையக மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த இவ்வாறான உதவிகள் தொடர வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...