rathakrusnan1
செய்திகள்இலங்கை

தரம் 6 புத்தகப் பிரச்சினைக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என இராதாகிருஷ்ணன் சாடல்!

Share

மலையகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில், கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (04) கொட்டகலை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உபகரணங்களை விநியோகித்தார்.

பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொட்டகலை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் ஏற்பட்டுள்ள பாரதூரமான தவறு குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

“தரம் 6 பாடப் புத்தக விவகாரமானது மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது. இதற்கான முழுப் பொறுப்பையும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.

மலையக மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த இவ்வாறான உதவிகள் தொடர வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...