அமெரிக்கா, 10 உலங்கு வானூர்திகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது.
இந்த உலங்குவானூர்திகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை வான்படையின் பயிற்சி, பேரிடர் மீட்பு, தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்காக இவை பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இலங்கைக்கான பாதுகாப்பு உறவுகள் இதன்மூலம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.