அமெரிக்காவின் பிரபலப் பொருளாதார நிபுணர் டேவ் பிராட் (Dave Brat), எச்1பி (H-1B) விசா திட்டத்தில் இந்தியாவில் பெருமளவு மோசடி நடந்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
டேவ் பிராட் இது தொடர்பாகக் கூறியதாவது “இந்தியா முழுவதும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மொத்த எச்1பி விசாக்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.”
“சென்னைக்கு 220,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், எச்1பி விசாக்களின் உச்சவரம்பு 85,000 மட்டுமே. அது நிர்ணயித்த வரம்பை விட 2.5 மடங்கு அதிகம். எச்1பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி நடந்துள்ளது. இந்தியாவில் எச்1பி விசா திட்டத்தில் 80 முதல் 90 சதவீதம் போலியானவை.”
“71 சதவீத எச்1பி விசாக்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. 12 சதவீதம் பேர் மட்டுமே சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வருகின்றனர். அங்கே ஏதோ நடக்கிறது என்பதை இது காட்டுகிறது.”
இந்தப் பிரச்சினை அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது என்றும் டேவ் பிராட் கடுமையாக எச்சரித்துள்ளார்.