images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

Share

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

புதிய பல்கலைக்கழக சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் வரை, பல்கலைக்கழகங்களுக்குப் புதிய பீடாதிபதிகள் (Deans) மற்றும் துறைத் தலைவர்களை (Heads of Departments) நியமிப்பதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானமானது பல்கலைக்கழகங்களின் சுயாதீனத் தன்மையைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கங்களின் சம்மேளனம் (FUTA), அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, அரசாங்கம் மாற்றுப்பாலினத்தை (LGBTQ+) ஊக்குவிக்க முயற்சிப்பதாக கல்வித் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புகளில் பல சிக்கல்கள் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவருவது நாட்டின் கலாசார விழுமியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

 

 

Share
தொடர்புடையது
images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...

images 4 7
செய்திகள்இலங்கை

தேசிய மின்சாரக் கொள்கை: பொதுமக்களின் ஆலோசனைகளை கோருகிறது வலுசக்தி அமைச்சு!

தேசிய  மின்சார கொள்கைக்காக பொதுமக்களின் அபிலாசைகள் மற்றும் யோசனைகளை கோரும் நடவடிக்கையை வலுசக்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது....