202409un swizterland human rights council
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் மோதல் கால பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”: ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கடும் அதிருப்தி!

Share

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் (Conflict-Related Sexual Violence) பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) கவலை வெளியிட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட ஐநாவின் விசேட ஆய்வறிக்கையில் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் நீண்டகாலமாக நீதி மறுக்கப்பட்டு வருகின்றது. 2009-ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதியில், அரச படைகளாலும் இராணுவத்தினராலும் இத்தகைய வன்முறைகள் பரவலாக நிகழ்த்தப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

பாதிக்கப்பட்ட சமூகத்தினர் சமூக அவமானம், பயம் மற்றும் குற்றவாளிகளால் ஏற்படக்கூடிய பழிவாங்கல்களுக்கு அஞ்சுவதாலேயே முறைப்பாடுகளைச் செய்யத் தயங்குகின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் இன்றும் நாட்பட்ட உடல் காயங்கள், மலட்டுத்தன்மை, உளவியல் முறிவுகள் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டவும், உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேம்படுத்தவும் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் நீண்டகாலமாக முன்வைத்து வரும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, தற்போதைய அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...