images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

Share

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை அனுமதிக்கும் திட்டத்தை சோதனை முறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டம் விரைவில் பல விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மான்செஸ்டர் விமான நிலையத்தில், பிரித்தானியர்கள் கடவுச்சீட்டு இல்லாமலேயே நுழையும் திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

பயணிகள் மின்னணு நுழைவாயில் வழியாக விமான நிலையத்துக்குள் நுழையும்போது, செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள கருவிகள் அவர்களுடைய முகங்களை ஸ்கேன் செய்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களை விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கும்.

இதன் மூலம், பிரித்தானியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பும்போது, கடவுச்சீட்டைச் சோதனை செய்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்காது.

ஆகவே, அவர்கள் தங்கள் கடவுச்சீட்டை,சோதனையிடுவதற்காக வரிசையில் காத்திருக்கவேண்டியதில்லை.

பிரித்தானியர்களுக்கு நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள இந்த திட்டத்தை அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கும் அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...

e8c8525a 174a 4fae a7ca 29dd06092afe
செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் 95 மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு: உணர்வுபூர்வமாக நடைபெற்ற மதிப்பளிப்பு நிகழ்வு!

மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை ஒன்றிணைத்து அவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு, மன்னார்...