1562298412 Four arrested for assaulting traffic cops at Batticaloa L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அட்டகாசம்: புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு சி.ஐ.டி அதிகாரிகள் உட்பட நால்வர் கைது!

Share

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதியில், தவறவிட்ட கமரா பையைத் தேடிச் சென்ற புகைப்படக் கலைஞர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) அதிகாரிகள் இருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை நாவலடி கடற்கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கல்லடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் குழுவினர், தவறுதலாகத் தமது பெறுமதியான கமரா மற்றும் உபகரணங்கள் அடங்கிய தோல்பையை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

அன்றைய தினம் இரவு 8 மணியளவில் மீண்டும் அந்த இடத்திற்குச் சென்று டார்ச் லைட் (Torch Light) வெளிச்சத்தில் பையைத் தேடியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் மீது எதிர்பாராதவிதமாக டார்ச் லைட் வெளிச்சம் பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர், “நாங்கள் சி.ஐ.டி அதிகாரிகள், ஏன் எங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சினாய்?” எனக் கேட்டுத் தர்க்கத்தில் ஈடுபட்டு, புகைப்படக் கலைஞர்களைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த புகைப்பட நிறுவன உரிமையாளர் மற்றும் ஏனைய கலைஞர்கள் மீதும் குறித்த குழுவினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு அஞ்சி கலைஞர்கள் தமது கைத்தொலைபேசிகள் மற்றும் கமராக்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இரு அதிகாரிகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரத்தைப் பயன்படுத்திச் சாதாரணப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தச் சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...