image 1200x800 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கைது! – போதைப்பொருளுக்காகக் கூலிக்குச் செயல்பட்ட அதிர்ச்சித் தகவல்!

Share

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி நிசன்சலா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கொலையாளிகளுக்கு உதவிய நவகமுவவைச் சேர்ந்த இரு சகோதரர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று (16) கைது செய்துள்ளனர். 20 மற்றும் 24 வயதுடைய நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகியோரே கொட்டாவை பகுதியில் வைத்து காரில் பயணித்தபோது மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகிய பாதாள உலகக் குற்றவாளிகளின் போதைப்பொருள் ஏஜெண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளனர். “சுத்தா ஐயாவின் வேலை ஒன்று உள்ளது” என வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவின் பேரில், இவர்கள் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு வார காலமாகச் சட்டத்தரணியின் நடமாட்டத்தைக் கண்காணித்த இவர்கள், சம்பவத்தன்று அவர் சுப்பர் மார்க்கெட் அருகே கார் நிறுத்தியிருந்த தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்குத் துல்லியமாக வழங்கியுள்ளனர்.

கொட்டிகாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, அதைத் துப்பாக்கிதாரிகளின் காரில் இவர்கள் சேர்த்துள்ளனர். அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்தக் கொடூரக் கொலைக்கு உதவியதற்காக இவர்களுக்குப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை; மாறாக ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் மட்டுமே கைக்கூலியாக வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரிகளுக்குத் தேவையான தங்குமிட வசதி மற்றும் போதைப்பொருளையும் இவர்களே விநியோகித்துள்ளனர்.

இதற்கிடையில், படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் பிடிகல, கொடமுன மயானத்தில் இடம்பெற்றன. இதில் ஏராளமான சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வாடகைக்கு எடுத்த காரை மீண்டும் ஒப்படைக்கச் சென்றபோதே பொலிஸார் இவர்களைத் துரத்திப் பிடித்துள்ளனர். தலைமறைவாக உள்ள துப்பாக்கிதாரிகளைப் பிடிக்கப் பொலிஸார் தீவிர வலைவீசி வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...