சுவிட்சர்லாந்து நோக்கிப் பயணித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது மீண்டும் வாஷிங்டன் டிசிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் உடனடியாகத் திருப்பி விடப்பட்டு, மேரிலாந்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் (Joint Base Andrews) விமானப்படைத் தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தத் தடையைத் தொடர்ந்து, ஜனாதிபதி ட்ரம்ப் மற்றொரு மாற்று விமானம் மூலம் சுவிட்சர்லாந்திற்குத் தனது பயணத்தைத் தொடருவார் என அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணத்தில் தாமதம் ஏற்பட்டாலும், டாவோஸில் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் பொருளாதார மன்றத்தில் இன்று ஜனாதிபதி ட்ரம்ப் விசேட உரையாற்றவுள்ளார்.நாளை டாவோஸில் காசா பகுதிக்கான அமைதி கவுன்சில் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளை அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பின் இந்தப் பயணம் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

