25095672 tn8
செய்திகள்உலகம்

காசா அமைதி வாரியத்தில் இணையுமாறு புடினுக்கு ட்ரம்ப் அழைப்பு: சர்வதேச அரசியலில் அதிரடித் திருப்பம்!

Share

காசாவின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமைதி வாரியத்தில் இணையுமாறு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கிரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்டமாக, அந்தப் பிராந்தியத்தை நிர்வகிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை ட்ரம்ப் நாடியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, புடினை இந்த அமைதி வாரியத்தில் இணையுமாறு அவர் அழைத்துள்ளார்.
இந்த அழைப்பு குறித்து கருத்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “புடினுக்கு அழைப்பு வந்துள்ளது உண்மைதான். காசாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா எப்போதும் தயாராகவே உள்ளது.

எனினும், இந்த வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

காசாவின் சிவில் நிர்வாகத்தை வழிநடத்துவது, மனிதாபிமான உதவிகளை உறுதி செய்வது மற்றும் ஹமாஸ் அமைப்பை நிராயுதபாணியாக்கும் பணிகளை மேற்பார்வையிடுவது ஆகியவையே இந்த வாரியத்தின் முக்கிய நோக்கங்களாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஏற்கனவே எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த ட்ரம்ப் ரஷ்யாவின் உதவியை நாடியிருப்பது சர்வதேச அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவை இந்த வாரியத்தில் இணைப்பது குறித்து இஸ்ரேல் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும், ஹமாஸுடன் நல்லுறவைக் கொண்டுள்ள ரஷ்யா இந்த வாரியத்தில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என அமெரிக்கா கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...