26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

Share

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், தன்னுடன் விளக்கமறியலில் உள்ள ஏனைய மூன்று பிக்குகளை அச்சுறுத்தித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை போதிராஜ விஹாரைப் பகுதியில், கடலோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறிப் புத்தர் சிலையை நிறுவிய குற்றச்சாட்டில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் (இயற்பெயர்: கசுன் திலுக்க குலரத்தன) உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தமக்குத் தெரியாமல் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதும் ஏனைய மூன்று பிக்குகள், நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி வழக்கிலிருந்து விடுதலையாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவர்கள் விடுதலையானால் தனது இனவாத அரசியல் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்பதால், கஸ்ஸப தேரர் அவர்களை அச்சுறுத்திப் பணிய வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

பௌத்த மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை ஒரு பெரும் சிக்கலாக வளர்த்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கஸ்ஸப தேரர் செயற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய ஐந்து சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பு விதிகளின் கீழ் இந்த சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...