accident tiruvarur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திம்புல பத்தனை சந்திப்பில் கோர விபத்து: லொறியுடன் மோதிய பேருந்து பயணிகள் – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

Share

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று (20) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி பேருந்து பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, இன்று காலை 7:00 மணியளவில் திம்புல பத்தனை சந்திப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் ஓய்வெடுப்பதற்காக, வீதியின் எதிர் திசையில் பேருந்தை நிறுத்தியிருந்ததாகத் தெரியவருகிறது.

அச்சமயம், பேருந்தில் பயணித்த இரண்டு பயணிகள் அதன் பின்புறக் கதவு வழியாக கீழே இறங்கி பிரதான வீதிக்கு வந்துள்ளனர். அப்போது, நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியா நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் சிக்கிய இருவரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய பயணி படுகாயமடைந்த நிலையில் உடனடியாக கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திம்புல பத்தனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...