676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

Share

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறியும் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ கேரட்டை ரூ. 3,500-க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள், காலி கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறிக் கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு வியாபாரி ஒரு கிலோ கேரட்டைச் சந்தை விலையைவிடப் பன்மடங்கு அதிகமாக ரூ. 3,500-க்கு விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குறித்த வியாபாரிக்கு எதிராகக் நீதிமன்றத்தில் வழக்குத் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் வர்த்தகர்கள் குறித்துக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...