யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (28) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயன்படுத்திய ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11 மணியளவில் அவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபர்களை ஜனவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஏனைய உபகரணங்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

