IMG 20211218 WA0017
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் திருவெம்பாவை பாதயாத்திரை!

Share

அகில இலங்கை சைவ மகா சபையினரின் திருவெம்பாவை பாதயாத்திரை மட்டுப்படுத்தப்பட்ட சிவனடியார்களைக் கொண்டு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா சூழலை கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களுடன் இப்பாதயாத்திரை 5 மணியளவில் யாழ்ப்பாணம்  மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் ஆரம்பமாகி, பொன்னாலையில் அமைந்துள்ள இராவணேஸ்வரர் தலத்தில் நிறைவடைந்தது.

இப் பாதயாத்திரையின் நிறைவில் நாள் காட்டி வெளியீடும், பிடி அரிசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அறநெறி மாணவர்களிடம் பை ஒன்று வழங்கப்பட்டு அதில் கைபிடி அளவு அரிசி சேகரித்து எதிர்வரும் தைப்பூச தினத்தில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்தளித்தலே இப் பிடி அரிசி திட்டம்.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான இலங்கை தழுவிய சிவபக்தர்களை உள்ளடக்கியவாறு இடம்பெறும் இப் பாதயாத்திரை இம்முறை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...