ரம்புக்கனை – கொடவெஹெர ரஜமஹா விகாரையிலிருந்த 5 தங்க கலசங்கள் மற்றும் 3 பளிங்கு கலசங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனுதுங்க குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பரிசோதனைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
#SrilankaNEws
Leave a comment