GA
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதோர் அதிகம்

Share

60 வயதிற்கு மேற்பட்ட 3776 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி இதுவரை செலுத்திக்கொள்ளவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனை தெரிவித்தார்.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

60 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை முதியோர் கழகங்கள் மற்றும் முதியோர் அமைப்புக்கள் ஊக்குவித்து அவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தம்மையும் தம் குடும்பத்தாரையும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள இயலும்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டு வறுமையில் காணப்படும் எமது மாவட்டத்தில் தொற்றுக்களின் பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...