tamilni 42 scaled
இந்தியாசெய்திகள்

57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! உயிருக்கு போராடும் 20 பேர்..தமிழகத்தில் பரபரப்பு

Share

57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! உயிருக்கு போராடும் 20 பேர்..தமிழகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த 18ஆம் திகதி விஷச்சாராயத்தை அருந்திய பலர் உடல்நலம் மோசமாகி உயிரிழந்தனர்.

பின்னர் சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் இன்னும் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

நேற்று முன்தினம் வரை 40 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று சிலரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் விஷச்சாராயத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...