கனடாவின் பிரதமராகப் பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உணர்ந்து தன்னை தானே ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார்.
இது தொடர்பில் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
நேற்று எனது கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில் எனக்கு தொற்று இல்லை எனத் தெரிந்தது.
எனது சோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக உணர்கின்றேன். ஆகவே சுகாதாரத் துறையின் விதிகளைப் பின்பற்றி ஐந்து நாட்களுக்கு என்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றேன்.
நான் தற்போது ஆரோக்கியமான உடல் நிலையுடன் உள்ளேன். அதனால் வீட்டில் இருந்து பணிபுரிய உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
Leave a comment