1767596874 New Project 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்ட வழக்கு: பெப்ரவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Share

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.

தையிட்டியில் உள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றினால் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

வேலன் சுவாமிகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் சார்பாகப் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா சிரேஷ்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்

தையிட்டி விகாரை விவகாரம் வடக்கு அரசியலில் நீண்டகாலமாக ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...